கானக்குயிலும் சூறைப்புயலும்!

அத்தியாயம்-1

என் கானத்துக் குயில் ஒரு புயல்காற்றை எதிர்த்து மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையைப் பிடித்து மழையில் நனைத்து, உடல் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. அதைப் பார்த்த புயல் அதனிடம்  தொடுக்கும் கேள்விகளும், அதற்குக் குயில் உரைக்கும் பதிகளும் எனது சொந்தக் கற்பனை!ஒரு குறுங்காவியம்…இது! இதைப் புதுக்கவிதையாகவும் கொள்ளலாம் வசன கவிதையாகவும் கொள்ளலாம்!

#copyright

சூறைக்காற்று :

நான் இத்தனைக் கொடூரத்தில்

காற்றடித்தும் நீ

இப்படி உயிரை

ஊசலாடிக்கொண்டிருக்கிறாயே..

இதுதேவையா???

இந்த அவதி இனியும் வேண்டுமா??

கானக்குயில்:

 நான் என்ன  ஜென்மம் என்று

எதையும் நான் நினைக்கவில்லை….

என் ஆயுளின்

நாட்களே எனக்குப் போதும்.

ஆனால் என் ஆயுள் கண்டவன்

கையில் கொத்தடிமைப்பட்டுச்

சாக எனக்கு விருப்பமில்லை..

என் சாவை அடுத்தவர் தீர்மானிக்க முடியாது!

கடவுளைப் போல் அதை

நானே தீர்மானிப்பேன்!

சூறைக்காற்று :

 நீ எதற்குத் தேவையில்லாததைப்

பேசுகிறாய்…செய்கிறாய்..???

கானக்குயில்:

நீங்கள் தேவையானதென்று

நினைத்துப் பேசும் எதுவும்

எனக்குத் தேவையிலாதவையாகத் தெரியலாம்!

அதேபோல் உங்களுக்குத் தேவைப்படும்

செயலை நீங்கள் செய்வது

எனக்குத் தேவையில்லாததாகத் தோன்றலாம்.

இது வாழ்க்கையில் முரண்பாடுடைய கேள்வி.

ஆனால் இதற்குப் பக்குவம் வாய்ந்தவர்களால்

மட்டுமே நல்ல பதிலுரைக்க முடியும்!

நான் உன்னைக் குறைசொல்லவில்லை..

உன் வேலை அடுத்தவர்களின்

வாழ்க்கையில் விளையாட்டுக் காட்டுவதுதானே!!!

சூறைக்காற்று :  

உனக்கு எதற்கு இந்த

வீண்விபரீதமான வேலை??

நான் நினைத்தால் உன்னை இப்போதே…..

கானக்குயில்:  

என் சாவு உங்கள் கையில் உள்ளது

 என்று நீங்கள் மறுபடியும்

என்னைக் குறுகு விசாரணை செய்வதுபோல்

பயமுறுத்தப் பார்க்கலாம்…

நான் வானில் பறக்க

என் தாய் எனக்குக் கற்றுத்தரும்போதே

பூமியைத் தூசாகவும்

உயிரை இறக்கயின் மயிராகவும்

பார்க்கத் தொடங்கிவிட்ட

எனக்கு உன் மிரட்டல் தொனியின் மீது

அச்சமில்லை.

நான் மரணத்தை வென்றதால்தான்

இப்போதும் மரணத்தை எதிர்த்து

என் பலன் கொண்ட மட்டும் போரிடுகிறேன்!!

உனக்கு என்னைப் பார்த்து

பயமாக இருந்தால் விலகிக்கொள்!

சூறைக்காற்று :

 நீ கர்வத்தில் பேசுகிறாய்…

உங்களுக்கு உள்ள உரிமைகளைச்

சரிவரச் செய்யும்போது

அதை நானும் செய்வதில்

உங்களுக்கு என்ன வலிக்கிறது..?

எனப் பதிலுக்கு நானும்

நாலு கேள்விகள் கேட்கலாம்

என்று நினைத்தாலும்

அப்படிப் பதிலுக்குப் பதிலுரைத்துப்

பல்லுக்குப் பல்

சொல்லுக்குச் சொல்

பேசுவது எந்த விவாதத்தையும்

முடிவுக்குக் கொண்டுவராதென்பதால்

அதை நான் விட்டொழிக்கிறேன்…

சூறைக்காற்று :

அதெப்படி வந்தது

உனக்கு இத்தனை நெஞ்சுறுதி??

கானக்குயில்:

யரேனும் எதிர்வாதம் புரிந்து

என் உருவத்தை எள்ளி நகைத்து

 மடக்க நினைத்தால்….

’’நதி கூட ஊற்றிலிருந்து கிளம்பிக்

கடல்கூடத்திற்குச் சென்று

ஆழ்கடலில் பள்ளிகொள்கிறதே….

அதுபோல் நானிருந்தால் என்ன தவறு?

என்று ஒரு சூட்டிப்பான பதிலை

அள்ளித் தெளிக்கிறேன்…’’

சூறைக்காற்று :

 உனக்கெல்லாம் எப்படி

வாய்த்தது இந்த

அளப்பரிய ஆற்றல்??

கானக்குயில்:

 யாரேனும் என் மன உறுதியைக் குறித்து

அவரது மனதினுள்

நினைத்துப் பொருமினால்….

அவர்களுக்கு எனது பதிலிது:

’’அவரவர் கைகள், சாப்பிடவும்

துணி உடுக்கவும் பயன்படுவது போல்

எனக்கும் இது இயல்பானதொன்றுதான்!

இதுகுறித்து யாரும் வாய்பிளக்கத் தேவையில்லை

’’சரியாதொன்றைச் தவறானஒருவர்

செய்தாலும் அது சரிதான்!

ஆனால், தவறான ஒன்றை

சரியானதென்று நினைத்துச்

சரியான ஒருவர் செய்தாலும் அதுதவறுதான்.’’

என்று நான் பகுட்டில் குத்துவதுபோல்

படக்கெனப் பதிலுரைப்பேன்.’’

சூறைக்காற்று :

இப்போது நீ என்ன செய்கிறாய் ??

இந்தக் கேள்வியை உங்களைப் போல்

யாரேனும் என்னைக் கேட்டால்…

’’பல் வலுக்கும் போது புடலகாய் கூட்டும்

ஒருவர் கன்னத்தில் அறையும்போது

தர்பூசனி பழமுமா சாப்பிடமுடியும்?

நான் ஒரு சுயம்பு

என்னில் விழும் பதில்களுக்கு

என் மனசே ரெடியாக

அப்ஜெக்டிவ் டைவ் கேள்விக்கான

பதில்களைப்போல்

மூன்று பதில்களை எப்பவும்

தயார் நிலையில் வைத்துள்ளது….

                                                        உரையாடல் தொடரும்…

#copyright

சினோஜ்                         

ஒரு சில அனகோண்டாக்களுக்கு என் ஆழ்மனதின் தெறிப்புகள்….

நலம் விம்பிக்கு,

#copyright

அதிகமான ஆசைகள் கொண்ட என் மனதுக்கு எதோவதொன்று எனக்கு நடக்கும் முன்பாகவே அதைப்பற்றிய நிகழ்வுகளும் சிந்தைகளும் என் தீர்க்கதரிசனப் பார்வையின் கவனத்திற்கு வருகிறது.

என்னை உற்றுநோக்கு ஆராய்கிற பலருக்கும் என்னைப் பற்றித்தெரியாது. நான் அவர்களைவிடவும் அவர்களையே அதிகம் உற்றுநோக்கி என் படைப்புக்கான அரிதாரம் பூசிக்கொண்டிருக்கிறேன் என்று.

காலச் சுவற்றின் விரிசல் விழும்போது அதற்கு என் கவிதைவரிகளால் குழைத்த கருத்துப்பட்டி தேய்க்காமல்போனால் அந்தக்க் காலம் என்னை இப்போதும், எப்போதும் முப்போதும் மன்னிக்காது.

நான் நட்சத்திரங்களை வெறுமனே எண்ணிக்கொண்டு இரவுபொழுதை வீணடிப்பதாக நீங்கள் கருதலாம். அது என்னப் பற்றிய உங்கள் கருத்து என்றே வைத்துக்கொள்ளலாம்…ஆனால் நான் நான் கண்ட மனிதர்களின் சாயல்களை அந்த நட்சத்திரங்களின் முகத்திலும் என் லட்சிய முகவரியை அது கொடுக்கின்ற ஒளியிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய முற்படும்போதுதான் என்னைக்குறித்த உண்மையை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தறிவீர்கள்…

நான் காற்றோடு பேசி அதன் மௌனத்தைப் பலாத்காரமாய்க் கலைத்து என் கவிதைக்கான் கரு ஆக்கிக்கொள்பவன்.

விண்ணில் சுழலும் கோள்களை எல்லாம் நான் காணும் கனவுகளுக்கான எஞ்சினாக்கிக்கொண்டு என் நித்தியரையான இரவுகளில் நான் இன்னும் சுகித்திருக்கிறேன்.

மட்டமற்ற மகிழ்ச்சியாக நான் கருதுவது சகமனிதப் புத்தகங்களைத்தான். அவர்களின் ஒருதுளிப் பேச்சும் என் எழுத்தாக்கத்தின் அற்புத மை.

நான் கற்பகத்தருவாகக் கருதுவது இந்தச் சமுதாயத்தைத்தான்.

அது எனக்களித்துள்ள அனுபவமும் அளவில்லா மகிழ்ச்சிக்கும் முன் கொடுத்த துன்பங்களும் என்னை எரித்த சாம்பல் துளிகளிலும் கூட இரவு நேர மின்விளக்குகளைப் போல மின்னித் தெரியும்.

தேவைப்படாத என் காத்திரமான சொற்களை விழுங்கிக்கொண்டு மறைகிற அனகோண்டா மேகங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில்: ‘’நீ கடல் நீரென என் சொற்களை உறிஞ்சிக்கொண்டாலும் என் சக்திகாந்த எழுத்துகளே உன்னுடலில் ஓடும் ரத்தசுழற்சி என்பது எனக்கும் உனக்கும் மட்டுமே தெரியும்.

நானிதை யாரிடமும் கூறிப் பெருமிதப்படமாட்டேன்..

எனக்குச் சொல்லிக்காட்டும்பழக்கமில்லை என்பதால் ஆனால் நான் எழுத்தாளன் என்பதால் என் மனம் ஒரு உளறுவாய்…என் கை மறுத்தாலும் மசக்கை பெண்போல அது வாந்தி எடுத்துவிட்டது இந்தக் காகிதக்குவளையில்.

நானென்ன செய்ய முடியும் ..?’’

copyright

01-11-2@2@

சினோஜ்

🙂

’’என் கடந்த நாட்களைத் தேடிப் பார்க்கிறேன்…’’

நலம் விரும்பிக்கு,

என் நண்பர்களைவிட எதிரிகளையும் விமர்சிப்பவர்களையும் தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். என் முதற்றானது முதல் ஈற்றயளடிபோல் ஈரான தவறுகளையும் அவர்களே எனக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

நான் ஆகாயத்தையே என் சொற்களால் கட்டிப்போட வேண்டுமெனத் தவம் கிடக்கிறேன்.

என் ஆசா பாசங்களால் என் கடந்த காலங்களின் கால்களையெ குட்டிபோட்ட பூனைபோலச் சுற்றி வருகிறது. எதுஎதற்கோ யோசித்து மூளையின் நரம்புகள் புடைத்துவிடுவதுபோலச் சிந்திக்கிறேன் நான். என் கற்பனைகள் எல்லாம் கடந்த காலத்தின் நீட்சிகள்., நான் யோசிப்பது எல்லாம் இயற்கைத்தாயின் தீட்சண்யப் பார்வையின் திருக்கொடைகள்.

எங்கெங்குச் சென்றாலும் கால்களால் நடந்துசென்று போகும் போது பார்த்த அனுபவங்களையே நான் என் எழுத்தின்பலமாகப் பார்க்கிறேன். என் திறமையின் பெட்டகமாக எண்ணிக்கொள்கிறேன்.

மாற்றத்தை நான் மனதாற வரவேற்கிறேன். அதற்காக மாற்றத்தினைச் செயற்கையாய் நிகழ்த்திக்காண்பித்து ஒருநாள் கூத்துக்காக மீசையை மழிக்க எனக்கு உடன்பாடில்லை எனக்கு.

எனக்கு சிங்கத்தின் மீசையில் உட்காரும்  ஈயைப் போல துணுவும் வேண்டுமென கவித்தாயிடம் கேட்டுக்கொள்கிறேன். சிங்கம் என்றும் காட்டுராஜா என்றும் தெரியாமலே சிலநாட்கள் வாழும் அஃறினைபோல் என் எழுத்துகளும், பாடுபொருட்களும் எதைக்குறித்தும் கவலைபடக்கூடாது என்பதில் நான் அதிகம் அக்கறைகொள்ளுகிறேன்.

நானும் மனிதந்தானே. இயல்பான சில மறதிகள் என் மனக்கத்திலும் உண்டு. ஆனால் சில அதிர்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் மட்டும் எந்தக் கால அழிப்பானாலும் என் மனதிலுந்து ஒருநாளும் அழிக்கமுடியாது; அதற்கு நான் ஒருபோதும் அனுமதி கொடுக்கப் போவதும் கிடையாது.

நான் மீண்டும் சொல்கிறேன்; காலத்தின் கணக்கில் என் வரவும் செலவும் போக மிச்சமிருப்பது என் எழுத்துகள் மட்டும்தான் …

நான் அந்தக் கடந்த காலத்தின் மலையடிவாரத்தில் என் எழுத்துகடையை விரிக்கிறேன்…

அதில் நானே முதலாளே! நானே தொழிலாளியும்கூட.

உங்களுக்கு இது குழப்பலாம் ஆனால் நீதிபதியின் முன் சாட்சி சொல்லுபவனைபோல்  நான் சொன்னதெல்லாம் உண்மையே தவிர வேறொன்றுமில்லை.

27-10-20

சினோஜ்

ஆன்லைன் விபரீதம்…

நாளை யாரெல்லாம் இருக்கப்போகிறோம் என்று தீர்மானிபது நமது மனதின் நிம்மதியே தவிர நாம் சேர்த்து வைத்து அனுபவித்து வருகிற சொத்து பத்துகள் அல்ல.


அதனால்தான் சுப்பிரமணியனுக்கு எட்டயபுர அரண்மனையில் சீட்டுக்கவியாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் சும்மாவே பொழுதை ஓட்டக்கூடிய தருணங்கள் வாய்த்தும் அதில் இருந்து விலகி தன் எழுத்தின்படியும் சுயமரியாதையுடனும் வாழநேர்ந்தார். அதனால்தான் அவரை இன்று கடவுளுக்கு இணையானதொரு ஸ்தானத்தில் வைத்து மகாகவி பாரதியார் என்று அவரது பெயரைப் பாடிப் புகழ்கிறோம்.
இன்றைய இளைஞர்களின் தேடுதல் என்பது குறைந்துவிட்டது. சொகுசு வாழ்க்கை என்பது கைக்கு எட்டியதூரத்தில் கிடைக்கவேண்டுமெனவும் உழைக்காமலேயே எதுவும் தன் முன் ஜீபூம்பா போலத் தோன்று ஒரே இரவில் தான் இந்த உலகப் புகழ் பெற்றவராக வேண்டுமென நினைத்துப் பகல் கனவு காண்கிறார்கள்.


அப்படி ஒரே இரவில் அத்தனையும் கிடைத்துவிட்டால் அப்படிக்கிடைத்த பணத்தை வைத்து அதுள்ளவரை மட்டும்தானே வாழமுடியும்? அது தீர்ந்துவிட்டாலோ அல்லது அப்பணத்தை மீண்டும் ஈட்டுவதற்காக திறமை நம்மிடம் இல்லாவிட்டாலோ அல்லது அப்பணத்தையோ சொத்தையோ கொள்ளையர்களிடம் பறிகொடுத்துவிட்டாலோ அதனால் நாம் அடைந்ததுதான் என்ன?


அதனால் திறமைக்கு முதலிடம் கொடுங்கள்.அதிஷ்டத்தால் வாழ்கையில் சில பொருட்கள் கிடைத்தாலும்கூட அந்தப் பொருட்களைப் பயன்படுத்தி மேலும் நம்மை நாமே செதுக்கிக்கொள்வதற்காகவும் முன்னேறிக்கொள்வதற்காகவும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால் ஒருசிலர் விளம்பரங்களில் வந்து இது விளையாடினால் அது விளையாடினால் இத்தனை பணம் வரும்! அள்ளிக்குவியும் என்று சிரித்துப் பேசி உங்களின் உள்ளத்தை மாற்றினால் உங்களின் கடந்தகாலத்தையும், இதேதொழியில் இதே விளம்பரத்தினால் என்னென்னவெல்லாம் இந்த நிகழ்கால உலகில் நடந்துவருகிறது?அதன் உண்மைத்தன்மைதான் என்ன? இது குடும்பத்தைச் சீரழிக்குமா? இல்லை உயிரைக் காலனைபோல் பறிக்கும் சூழ்ச்சி உள்ளதா? வங்கியில் சேமிப்புக்கணக்கில் உழைத்துச் சேர்த்து அடுத்து பெரிய கனவில் உள்ளபோது நம் புத்தியில் திடீரென்று முளைக்கும் ஒரு எண்ணத்தால் அந்தக் கனவுகளைக் கலைத்து,நம் லட்சியக் கோட்டையைத் தரைமட்டமாக்கக்கூடிய சகுனித்தனங்கள் அதில் அடங்கியுள்ளதா? பகல்கொள்ளைபோல் சில சூட்சுமத்தால் நம் மதியை மயங்கி; மூளையைக் குழக்பிச் சிந்தையைச் சாணிக்காகிதமாக்கிக் கசக்கியெறியும் நோக்கில் சில விஷமங்களுக்கு நம்மை நாமே அடிமையாக்கிக்கொள்ளவேண்டாம்…


இப்பதி…புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 30 லட்சத்திற்குமேல் தான் ஓடிஓடி உழைத்துச் சேர்த்துவைத்த பணத்தைச் சில நாட்களில் இழந்த துக்கத்தால் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்யும்முன், ஒரு வாட்ஸ் ஆப் பதிவைத் தன் மனைவிக்குப் பேசி அனுப்பியிருந்தார். அதில் அத்தனை கரிசணை தன்மனைவி மற்றும் குழந்தைகளின் மீது.
அதுகுறித்து ஒருவர் ஃபேஸ்புக்கில் அப்படியே பதிவிட்டிருந்தார். இன்று காலையில் அதைப்பார்த்ததும் மனமுருகிவிட்டேன்.
பிசினஸில் கிங்காகா வலம் வந்தவர் ஒரு ஆன்லைன் கேமில் இழந்த பணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தம்தான் அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்பதிவில் அவர் கூறுகிறார்;’’ நான் இழந்த பணத்தை என்னால் இனிமேல் சம்பாதிக்கவே முடியாது’’ என்று உறுதியாக் கூறியுள்ளார்.
அப்படியென்றால் இதற்கு முன் ஆன்லைன் ரம்மி விளையாடியபோது அவரது உறுதியைக் குலைக்கும் வகையில் சில ஆயிரங்கள் கொடுத்து அவரை நம்பச் செய்தபின்தான் பல லட்சங்கலை இழப்பதற்காக சூழலை அந்த விளையாட்டு அவரது மனதினுள் ஏற்படுத்தியிருக்கும் என்று கருதுகிறேன்.
இதை அவர் முன்பே செய்திருக்கலாம்;
தெளிந்திருக்கலாம்; அல்லது தனது மனக்குழப்பத்தை தனது நண்பர்களிடமோ மனைவியிடமோ பேசியிருக்கலாம். ஆனால் விளையாட்டு விபரீதத்தில்கொண்டுபோய் முடிந்துவிட்டது தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் எத்தனையோ இளைஞர்கள் பலர் இந்த் அநியாய கேமிற்கு அடிமையாகுதல் என்பது வேதனையளிப்பதாகவே உள்ளது.

நமது ஆசையைத் தூண்டினால் அந்த ஆசைக்கு எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை யோசிக்கலாம்.


தகுந்த நபர்களிடம் ஆலோசனைக்கேட்டு தெரியாததைத் தெரிந்து கொள்ளலாம்.


தீ என்று தெரிந்தும் அதைத் தொட்டுச் சுட்டுக்கொள்வதற்குப் பதில் அதன் வெப்பத்தினால் சிறிது தூரம் தள்ளியிருப்பதும் நல்லது என்று உணரலாம்.
புத்தியை மறைக்கும் விவேகமில்லாத செயல்களைச் செய்யச் சொல்லும் மூளைக்குத் தியானம் எனும் கருவியால் முட்டுக்கட்டைபோட்டும் ஞானத்தால் குழப்பத்தை நீக்கி மனஒருமைப்பாடுடன் இவ்வுலக வாழ்வில் தெளிவடையலாம்.


கடைசியாக ஒன்று ; பணம் நிச்சயம் மரத்தில் காய்க்காது; அப்படிக் காய்ப்பதாக யாராவது சொன்னாலோ அல்லது நம்மை நம்பச் செய்தாலொ அது குறித்து விழிப்படைவோம்; உண்மையாக உழைப்பதுதான் உடலில் ஒட்டும் என்ற தன்மானத்தின் வாழ்க்கைச்சூத்திரம்கூட சில தீயவற்றிலிருந்து முற்றிலும் நம்மைத் தற்காக்கும் தன்மையுடைதாகும். ஒரேஒரு வாழ்க்கை அதை அற்பக்காரணங்களுக்காகச் செலவழிப்பதில் அர்த்தமில்லையே!


**


சினோஜ்

நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….

நலம் விரும்பிக்கு

இந்தப் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் சுழன்றோவிட்டது. இன்னும் சுழலத்தான் போகிறது. அதன் சுழல்பாதையில் நாம் சந்திரன் ஒளியைப்போல் குறுக்கே போகத்தேவையில்லையென்றாலும்  நமது மனதகுலத்தின் நவீனத்தொழில்நுட்பத்தின் வருகையால் நாமிழந்துவரும் நல்லபழக்கங்களைப் பற்றிப் பட்டியலிட்டு ப்பார்த்தால் பளபளவென்றிருக்கும் மனம்கூட சிறிது பதறிப்போகும்?

இந்தக் காலத்தில் ஒருநாள் மனநிம்மது என்பது, அடுத்தவர்களின் முகத்தில் தற்செயலாய் புன்னமை வழிவதும் அபூர்வம் ஆகிவிட்டது.

முகத்தில் தோன்றும் இயற்கைப் புன்னகையைச் செல்போனில் தொலைத்துவிட்டு அது மற்றவர்களின் புன்னகையோ அல்லது எமோஜிக்களின் புன்னகையையோ நமக்குப் பதிவிடச் சொல்லி நமது புத்திக்குக் கட்டளையிட சுட்டுவிரலும் கூச்சமின்று அதைச் செய்து தொழில்நுட்பத்திற்கும்  அதற்கு முள்ள கள்ளத்தொடர்பைக் கச்சிதமாகக் காய் நகர்த்துகிறது.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்து நாலாவட்டத்திலும் அது விரிந்தாலும் மனிதனின் அடிமைப்படுத்தும்போதுதான் விளையாட்டு விபரீதம் ஆகி அவனுக்கே அது பாதிப்பில் வந்து முடிகிறது.

தேவைக்கேற்பப் பயன்படுத்திய பொருட்களின் விலையில்லாத வெகுமதிப்பை நாம் மறந்துவிட்டு விஞ்ஞானத்தில் விளைபொருட்களின் மீது பற்று கொள்வது கொஞ்சம் மனதைக் கனக்க வைத்தாலும் அதில்லாமல் நாமும் இல்லை; தன் நேர்க்கோட்டுப் பாதையில் சுழலும் 5ஜி பூமியும் இல்லை என்றுதான் நாம் ஒப்புக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

கடிதத்தின் புனித்தன்மையும் நம் விரல்களைப் பேனாவுக்கு  வளைந்துகொடுத்துக் குனிந்து எழுந்தி, அதேபேனாவைப் போட்டு வைக்கும் ஜாமெண்டிபாக்ஸின் பொக்கிஷத் தன்மையும்,நம் எழுத்துகளைக் காகிதத்தில் பார்த்து நாமே நம் எழுத்தின் அழகில் மயங்கி முத்தம் கொடுத்து, அதை நமது நலம்விரும்பிகளின் முகவரிக்கு அனுப்பப்படும் கடிதங்களின் உறைமேல் முகவரியில் எழுதும் அவர்களின் முகவரி மனதில் பதிவது மட்டுன்மல்லாமல் கடிதத்தின் மூன்று முனைகளில் அரிசிச் சோற்றை நசுக்கி ஒட்டுகின்றபோது அவர்கள் மீதன  அக்கறை கலந்த பாசப் பொங்கல் மனதில் பொங்கி மனதில், உள்ளத்தில் புன்னகைதவழும் பிரியச் சுவையைப் பசைபோல் ஒட்டுகிறது… ஆனால் இப்போது அற்பதொழில்நுட்பத்தல நமது அடையாளமான நுண் திறமைகளுடன், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும், உன்னத மேன்னையைத்தூக்கிப் பிடிக்கும் உறவுகளின் புனிதத்தையும், நட்பின் விரிவையும் நேருக்கு நேராகப் பேசுவதுபோல் மெய்நிகர் பிம்பத்தைக் தோற்றுவித்துள்ள சாட்டுகள், வலைப்பேச்சள் ஆகியவற்றின் மூலம் போலியான சந்தோஷத்தையும் பகட்டான தோற்றத்தையும் பெருமைத்தோரணையும் , அதீத கற்பனையும் , பேராசையும் , இயல்புக்கு மீறிய உணர்வுகள், சமூகச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தி உண்மையான உறவுக்குப் பதிலாக இடைவெளியைக் கூடச்செய்வதாக உள்ளது.

இக்கால வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், 5ஜி செல்போன் சேவைகள் நமக்கு சில டேட்டாகளைச் செலவழித்து இலவசாமப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றபரந்த மனப்பான்மை ரீதியில் கொடுத்து அவர்களின் வலைதளத்தில் மூழ்கி யிருக்கச் செய்வதில் அவர்கள் வெற்றி அடைகிறார்களே தவிர நாம் நாம் ஆரோக்கியத்தையும் பாரம்பரியத்துவத்தையும், நமது சிந்திக்கும் திறனையும்,நம் ஆற்றல்களை நாமே அடையாளம் காணுகிறம் வாய்ப்பையும் என்றிலிர்ந்தோ இழந்து வருகிறோம் என்பதைச் சொன்னால் இதயத்தின் அஸ்திவாரம் பூகம்பம் வந்ததுபோல் அதிர்கிறது.

குழந்தைகளின் கையில் களிமண்ணும், சாப்பீஸும் , சிலேட்டும், தாவரங்கள்,செடிகொடிகள், பல்லாக்குழிக்கற்கள், தாயக்கட்டை,பாண்டி,குண்டுகள், சோழிகள் போன்ற உடலினை வலுவாகும் , நரம்பினை இறுகச் செய்யும்,மூளைக்கு சிந்தனை ஊட்டுவதை மறந்துவிட்டு ஒரு நவீன அறிவிற்காகவும் வெற்றுப் பெருமைக்காகவும் போய் ஒரு போலி மாயை உருவாகி நம் பாரம்பரியத்தின் வீரியத்தைக் குறைத்து வருவது என்பது வேதனையாக உள்ளது.

நம் கற்பனைகளைக் குறைக்கும்  சில சமூக வலைதளங்களை விட்டு நாம் முழுவதுமாக இருக்க வேண்டுமெனப்தில்லை. வளரும் குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் அனுபவித்த பாரம்பரியத்தைச் சொல்லிக்கிடுப்பது என்பது தொழில்நுட்பத்தை காட்டிலும் முக்கியம்.ஏனென்றால் தொழில்நுட்பத்தை யாரும் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம்…உதாரணம் ஃபேஸ்புக் நிறுவனம் மார்ஜ் ஜூகர் பெர்க் தனது10 பனிரெண்டு வயதில் கற்று கோடிங் அதில் 19 வயதில் நிபுணராகி இன்று மிகப்பெரிய பணக்காரகாம உலகில் டாப் 10லிஸ்டில் உள்ளார். பில்கேட்ஸ் 20 வயதில் கோடிங் கற்று அதில் நிபுணராகி விண்டோஸ் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டுள்ளார். இருபது வயதிற்கு மேல் ஸ்டீவ் ஜாப் ஸ் கோடிங் கற்று ஆப்பிளில் சாதித்தார்.

அதேபோல் தொழில்நுட்பத்திற்கேற்ப மொழியை நம் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தி  வெற்றி பெறலாமோ ஒழிய அதில் பொழுதைக் கழிப்பதாகச் சொல்லி நேரம் போகவில்லையே என்று அவர்கள் கூறுவதற்குச் செவி சாய்த்தா, பாரதிபோல் , பாரதிதாசன் போல் கண்ணதாசன்போல், மார்க்ஜூகர் போல், பில்கேஸ்ட் போ, அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்போல் ,நெபோலியன்போல்,  நம் குழந்தைகளைக் கட்டமைக்க வேண்டியது பொறுப்பு நம்மைவிட்டால் யாருக்கு உள்ளது? என்பதை யோசிப்போம்!

ஒருமரம் விதையில் இருந்து துளிர்த்து முளைத்து விருட்சமாகுமே தவிர எடுத்தவுடன் வானத்தை த்தொட்டுவிடாது.

அது காற்றையும் புயலையும் எதிர்த்து சூரிய ஆற்றங்களை உள்வாங்கி வெளிச்சம் என்ற நுட்பத்தை நோக்கி உயரமாக வளர்வதுபோல், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் நமது திறமைகளை வளர்க்கவேண்டுமெ ஒழிய அது நம்மை அடிப்படுத்தி அதன் சொற்கேட்ப நாம் நடப்பதாயின் நம் ஆறறவின் ஆற்றலைச் சிறைப்படுத்தி விட்டோமென்று அர்த்தம்..,.

அவசர உலகி தொழில்நுட்பத்தை அதன் தேவையறிந்து உபயோகிப்போம், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம்!

இது நமது தலையாய கடமை.

-)_23-)-10-)-20-)

நவீன காலத்தில் நாமிழந்தவைகள்….

நலம் விரும்பிக்கு

இந்தப் பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் சுழன்றோவிட்டது. இன்னும் சுழலத்தான் போகிறது. அதன் சுழல்பாதையில் நாம் சந்திரன் ஒளியைப்போல் குறுக்கே போகத்தேவையில்லையென்றாலும்  நமது மனதகுலத்தின் நவீனத்தொழில்நுட்பத்தின் வருகையால் நாமிழந்துவரும் நல்லபழக்கங்களைப் பற்றிப் பட்டியலிட்டு ப்பார்த்தால் பளபளவென்றிருக்கும் மனம்கூட சிறிது பதறிப்போகும்?

இந்தக் காலத்தில் ஒருநாள் மனநிம்மது என்பது, அடுத்தவர்களின் முகத்தில் தற்செயலாய் புன்னமை வழிவதும் அபூர்வம் ஆகிவிட்டது.

முகத்தில் தோன்றும் இயற்கைப் புன்னகையைச் செல்போனில் தொலைத்துவிட்டு அது மற்றவர்களின் புன்னகையோ அல்லது எமோஜிக்களின் புன்னகையையோ நமக்குப் பதிவிடச் சொல்லி நமது புத்திக்குக் கட்டளையிட சுட்டுவிரலும் கூச்சமின்று அதைச் செய்து தொழில்நுட்பத்திற்கும்  அதற்கு முள்ள கள்ளத்தொடர்பைக் கச்சிதமாகக் காய் நகர்த்துகிறது.

எவ்வளவுதான் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்து நாலாவட்டத்திலும் அது விரிந்தாலும் மனிதனின் அடிமைப்படுத்தும்போதுதான் விளையாட்டு விபரீதம் ஆகி அவனுக்கே அது பாதிப்பில் வந்து முடிகிறது.

தேவைக்கேற்பப் பயன்படுத்திய பொருட்களின் விலையில்லாத வெகுமதிப்பை நாம் மறந்துவிட்டு விஞ்ஞானத்தில் விளைபொருட்களின் மீது பற்று கொள்வது கொஞ்சம் மனதைக் கனக்க வைத்தாலும் அதில்லாமல் நாமும் இல்லை; தன் நேர்க்கோட்டுப் பாதையில் சுழலும் 5ஜி பூமியும் இல்லை என்றுதான் நாம் ஒப்புக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

கடிதத்தின் புனித்தன்மையும் நம் விரல்களைப் பேனாவுக்கு  வளைந்துகொடுத்துக் குனிந்து எழுந்தி, அதேபேனாவைப் போட்டு வைக்கும் ஜாமெண்டிபாக்ஸின் பொக்கிஷத் தன்மையும்,நம் எழுத்துகளைக் காகிதத்தில் பார்த்து நாமே நம் எழுத்தின் அழகில் மயங்கி முத்தம் கொடுத்து, அதை நமது நலம்விரும்பிகளின் முகவரிக்கு அனுப்பப்படும் கடிதங்களின் உறைமேல் முகவரியில் எழுதும் அவர்களின் முகவரி மனதில் பதிவது மட்டுன்மல்லாமல் கடிதத்தின் மூன்று முனைகளில் அரிசிச் சோற்றை நசுக்கி ஒட்டுகின்றபோது அவர்கள் மீதன  அக்கறை கலந்த பாசப் பொங்கல் மனதில் பொங்கி மனதில், உள்ளத்தில் புன்னகைதவழும் பிரியச் சுவையைப் பசைபோல் ஒட்டுகிறது… ஆனால் இப்போது அற்பதொழில்நுட்பத்தல நமது அடையாளமான நுண் திறமைகளுடன், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும், உன்னத மேன்னையைத்தூக்கிப் பிடிக்கும் உறவுகளின் புனிதத்தையும், நட்பின் விரிவையும் நேருக்கு நேராகப் பேசுவதுபோல் மெய்நிகர் பிம்பத்தைக் தோற்றுவித்துள்ள சாட்டுகள், வலைப்பேச்சள் ஆகியவற்றின் மூலம் போலியான சந்தோஷத்தையும் பகட்டான தோற்றத்தையும் பெருமைத்தோரணையும் , அதீத கற்பனையும் , பேராசையும் , இயல்புக்கு மீறிய உணர்வுகள், சமூகச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தி உண்மையான உறவுக்குப் பதிலாக இடைவெளியைக் கூடச்செய்வதாக உள்ளது.

இக்கால வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர், 5ஜி செல்போன் சேவைகள் நமக்கு சில டேட்டாகளைச் செலவழித்து இலவசாமப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றபரந்த மனப்பான்மை ரீதியில் கொடுத்து அவர்களின் வலைதளத்தில் மூழ்கி யிருக்கச் செய்வதில் அவர்கள் வெற்றி அடைகிறார்களே தவிர நாம் நாம் ஆரோக்கியத்தையும் பாரம்பரியத்துவத்தையும், நமது சிந்திக்கும் திறனையும்,நம் ஆற்றல்களை நாமே அடையாளம் காணுகிறம் வாய்ப்பையும் என்றிலிர்ந்தோ இழந்து வருகிறோம் என்பதைச் சொன்னால் இதயத்தின் அஸ்திவாரம் பூகம்பம் வந்ததுபோல் அதிர்கிறது.

குழந்தைகளின் கையில் களிமண்ணும், சாப்பீஸும் , சிலேட்டும், தாவரங்கள்,செடிகொடிகள், பல்லாக்குழிக்கற்கள், தாயக்கட்டை,பாண்டி,குண்டுகள், சோழிகள் போன்ற உடலினை வலுவாகும் , நரம்பினை இறுகச் செய்யும்,மூளைக்கு சிந்தனை ஊட்டுவதை மறந்துவிட்டு ஒரு நவீன அறிவிற்காகவும் வெற்றுப் பெருமைக்காகவும் போய் ஒரு போலி மாயை உருவாகி நம் பாரம்பரியத்தின் வீரியத்தைக் குறைத்து வருவது என்பது வேதனையாக உள்ளது.

நம் கற்பனைகளைக் குறைக்கும்  சில சமூக வலைதளங்களை விட்டு நாம் முழுவதுமாக இருக்க வேண்டுமெனப்தில்லை. வளரும் குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் அனுபவித்த பாரம்பரியத்தைச் சொல்லிக்கிடுப்பது என்பது தொழில்நுட்பத்தை காட்டிலும் முக்கியம்.ஏனென்றால் தொழில்நுட்பத்தை யாரும் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம்…உதாரணம் ஃபேஸ்புக் நிறுவனம் மார்ஜ் ஜூகர் பெர்க் தனது10 பனிரெண்டு வயதில் கற்று கோடிங் அதில் 19 வயதில் நிபுணராகி இன்று மிகப்பெரிய பணக்காரகாம உலகில் டாப் 10லிஸ்டில் உள்ளார். பில்கேட்ஸ் 20 வயதில் கோடிங் கற்று அதில் நிபுணராகி விண்டோஸ் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டுள்ளார். இருபது வயதிற்கு மேல் ஸ்டீவ் ஜாப் ஸ் கோடிங் கற்று ஆப்பிளில் சாதித்தார்.

அதேபோல் தொழில்நுட்பத்திற்கேற்ப மொழியை நம் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தி  வெற்றி பெறலாமோ ஒழிய அதில் பொழுதைக் கழிப்பதாகச் சொல்லி நேரம் போகவில்லையே என்று அவர்கள் கூறுவதற்குச் செவி சாய்த்தா, பாரதிபோல் , பாரதிதாசன் போல் கண்ணதாசன்போல், மார்க்ஜூகர் போல், பில்கேஸ்ட் போ, அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ்போல் ,நெபோலியன்போல்,  நம் குழந்தைகளைக் கட்டமைக்க வேண்டியது பொறுப்பு நம்மைவிட்டால் யாருக்கும் உள்ளது? என்பதை யோசிப்போம்!

ஒருமரம் விதையில் இருந்து துளிர்த்து முளைத்து விருட்சமாகுமே தவிர எடுத்தவுடன் வானத்தை த்தொட்டுவிடாது.

அது காற்றையும் புயலையும் எதிர்த்து சூரிய ஆற்றங்களை உள்வாங்கி வெளிச்சம் என்ற நுட்பத்தை நோக்கி உயரமாக வளர்வதுபோல், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் நமது திறமைகளை வளர்க்கவேண்டுமெ ஒழிய அது நம்மை அடிப்படுத்தி அதன் சொற்கேட்ப நாம் நடப்பதாயின் நம் ஆறறவின் ஆற்றலைச் சிறைப்படுத்தி விட்டோமென்று அர்த்தம்..,.

அவசர உலகி தொழில்நுட்பத்தை அதன் தேவையறிந்து உபயோகிப்போம், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம்!

இது நமது தலையாய கடமை.

-)_23-)-10-)-20-)

Healthy Weeknight Meals

Cooking can sometimes feel like a chore at the end of a busy day. It’s often tempting to throw a ready meal in the oven or call for take out. But preparing a simple and healthy family meal doesn’t have to be hard or time-consuming. Here are some quick wholesome dishes that you and your family will love. They can even be prepared in advance.

Breakfast at my House

During the week we’re often walking out the door with a coffee in one hand and slice of toast in the other, but on weekends breakfast is never rushed. It’s a late affair, sometimes spilling over to lunch, with lots of reading and chatter in between courses of fruits, poached eggs, honey and toast. One of our favorite things we like to serve when friends are visiting are buckwheat blueberry pancakes.

Design a site like this with WordPress.com
Get started